44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி உப்புச் சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகிலிருந்து மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம், வட்டாட்சியர் சேக்முஜிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு ஓட்டமானது திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவு தொடங்கப்பட்டு இரயில்வே சந்திப்பு, மன்னார்புரம் , டிவிஎஸ் டோல்கேட்,. வழியாக அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது.

இந்த பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *