தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்

தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து அரசே ஏற்று நடத்துவதுடன் 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்ப நல நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும்

ஊதிய ஒப்பந்தப் பணப்பலன்கள் அனைத்தும் ஓய்வூதியர்களுக்கு வழங்குவதுடன் ஓய்வூதிய பணப்பலன்கள் ஓய்வுபெற்ற அன்றே வழங்கிடவும் மாதத்தின் முதல் தேதியிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேரவை பொதுச் செயலாளர் மருதமுத்துஇணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்