Author: JB

திமுகவிடம் மேயர், து.மேயர் பதவிகளை கேட்டுள்ளோம் – தலைவர் தொல். திருமா வளவன்.

தஞ்சை மாவட்டம் கோவில்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவின் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஊராட்சி…

திருச்சியில் அரசு அலுவலர் களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு – கலெக்டர் சிவராசு ஆய்வு.

திருச்சி சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கலெக்டர்…

சமயபுரம் கோவில் உண்டியலில் 1-கோடி பணம், 2-கிலோ தங்கம், 2-கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட 26 காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் எண்ணப்பட்டது. இதில் 1கோடியே, 5 லட்சத்து, 17 ஆயிரத்து, 705 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 211 கிராம் தங்கம்,…

வேலை வாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் மாநகரம் சார்பில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் மற்றும் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பதவி ஏற்பு, உறுப்பினர்களுக்கு…

டிக் டாக் ரவுடி பேபி சூர்யா – குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.

மதுரையில் வசித்து வருபவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா வயது 35. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் வீடியோ பதிவிட்டு வந்தார். இவரது காதலர் சிக்கந்தர்ஷா வயது 45 இவர்கள் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஒரு…

தாய், மகளை கத்தியால் குத்திய போலீஸ்காரர் காவல் நிலையத்தில் சரண்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் பகுதியைச் சேர்ந்தவா் ராஜேந்திரன் வயது 42 சென்னை தலைமைச் செயலகப் பாதுகாப்பு காவல் பிரிவில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பூா்ணிமா வயது 37 இவர்களுக்கு பத்மினி வயது 16, காா்த்திகா வயது 13,…

திருச்சியில் கல்லூரி மாணவிகள் செய்த தானம் – நோயாளிகள் மகிழ்ச்சி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி சிகிச்சை கொடுக்கும் போது நோயாளிகளின் தலையில் உள்ள முடி கொத்துக் கொத்தாக கீழே விழுந்து தலை மொட்டையாகி விடுகிறது. இந்த கஷ்டத்தை அனுபவிக்காமல் இருப்பதற்காக நோயாளிகள் சிலருக்கு முன்னதாகவே மொட்டையடித்துவிட்டு கீமோ தெரபி சிகிச்சையை மருத்துவர்கள்…

மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெய லலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.

தமிழகத்தில் மறைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் நிரந்தர பொதுச் செயலாளாரும், முன்னாள் தமிழக முதலமைச்சாருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி மாநகர்…

திருச்சியில் அறங் காவலரை கண்டித்து வாடகை தாரர்கள் குடும்பத்துடன் கோவில் முன்பு உண்ணா விரத போராட்டம்.

திருச்சி அல்லித்துறை பகுதியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் முன்பு தன்னிச்சையாக செயல்படும் பரம்பரை அறங்காவலரை கண்டித்து 15 அடிமனை வாடகைதாரர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ம.ப சின்னதுரை தலைமை தாங்கினார்.…

திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 2-வது நாளாக உண்ணா விரதப் போராட்டம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கை வங்காளதேசம், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அகதிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தங்கள்…

திருச்சி ரயிலில் சிக்கிய 7 கிலோ தங்கநகை – 17 லட்சம் அபராதம் விதிப்பு.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அதில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த…

சின்ன வெங் காயத்தின் விலை வீழ்ச்சியால் 300 டன் தேக்கம் – விவசாயிகள், வியாபாரிகள் கவலை.

தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராத விலை வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதன்படி திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பொதுவாக தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி,…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.87 லட்சம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் கந்தசாமி மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 8703958…

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய – டிஐஜி.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகளில் திறம்பட சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவல்துறையினரையும்  இன்று நேரில் அழைத்த திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் அவர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

மதுரை- திரு நெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர் களுக்கு வழங்கிட – முதல்வருக்கு பாரத முன்னேற்றக் கழகம் வேண்டு கோள்.

மதுரை- திருநெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்கிட கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்…