Category: திருச்சி

திமுக மலை என்றால் பிஜேபி மடு – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

புதுக்கோட்டையில் கட்சியின் மூத்த முன்னோடி யான சேதுமாதவன் மறைவுயடுத்து அவருக்கு அஞ்சலி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

வெத்தலை, பாக்கு வைத்து முதல்வருக்கு அழைப்பு விடுத்து தாய், மகனின் நூதன போராட்டம் – கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அளுந்தலைப்பூர் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் – இவருக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மண்ட் போட்டு கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் எழுப்பி உள்ளார். இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு அப்ரூவல் வேண்டி புள்ளம்பாடி கிராம நிர்வாகத்தை…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் அட்டைகளை வீசி எறிந்த கிராமத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வருடந்தோறும் வீரபுரம் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட காவல்…

உலகச் சுற்றுச் சூழல் தினம் -திருச்சியில் 1000 மரக் கன்றுகள் நட்ட அமைச்சர் கே.என்.நேரு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு முன்னிட்டு, திருச்சி மாநகரஉட்பட்ட அண்ணாமலை நகரில், வனத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே…

உறையூர் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு செய்த மேயர் அன்பழகன்.

திருச்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும், கழிவுநீர் தேங்கி நிற்பது…

திருச்சியில் நடந்த சின்மயா னந்தா மெளனகுரு சுவாமிகளின் 86 -வது குருபூஜை நிகழ்ச்சி.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி சின்மயானந்தா மெளனகுரு சுவாமிகளின் 86 -வது குருபூஜை திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சரத்தின கீர்த்தனைகள். கோஷ்டி கானம், மாதேஸ்வர பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இசை கலைஞர்களின் இசை ஆராதனை நடைபெற்றது. பின்னர்…

தமிழகத்தில் தனி இட ஒதுக்கீடு 7% அதிகரிக்க வேண்டும் – தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் பேட்டி

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு…

திருச்சி மாநகரில் இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் – மேயர் அன்பழகன் தகவல்.

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூவில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு , மாநகராட்சி மேயர் அன்பழகன் ,…

ஆற்றில் குளித்த சிறுவர்கள் உள்ளிட்ட 7-பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கினர். அதனைத் தொடர்ந்து, 7 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி…

ஐவர் கால்பந்து போட்டி இந்திய அணியில் பங்கேற்று 2-வது இடம் பிடித்த திருச்சி மாணவர் – உற்சாக வரவேற்பு அளித்த BVM பள்ளி நிர்வாகம்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கும் 14-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த 500க்கும்…

தொ.மு.ச சார்பில் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேயர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி கோயினூர் தியேட்டர் அருகே உள்ள…

சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி – அரசு மரியாதை யுடன் நல்லடக்கம்.

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் வயது 59. இவர் தா.பேட்டை அருகே உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஏட்டு தங்கவேல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று துறையூரிலிருந்து மொபட்டில் தங்கவேல்…

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி கல்லக்குடி காவல் நிலைய போலீஸார்.

கோவில்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை…

மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் ரெங்க நாதரை தரிசனம் செய்த கிராம மக்கள்.

கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் உள்ளது ஆர்.டி.மலை, பாறைகிழம், அழகாபூர், கிராமனம்பட்டி ஆகிய கிராமங்கள். இக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஸ்ரீரங்கம் பெருமாளே குலதெய்வம். இதனால் இப்பகுதி மக்கள், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கரூரில் இருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, தங்களது…

உலக சைக்கிள் தினம் – 50 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்த திருச்சி எஸ்.பி.

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சைக்கிள், பல விதமான நினைவுகளை உண்டாக்கி இருக்கும். குறிப்பாக எந்த ஒரு மனிதனும் சைக்கிளை ஓட்டி தன் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் இன்று ஜூன் 3-ம் தேதி…