Latest News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் வணிகர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்:- திருச்சியில் ரவுடி சுட்டு பிடிப்பு – காயம் அடைந்த போலீசாரை நலம் விசாரித்த கமிஷ்னர்:- திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:-

திருச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் படங்கள்.

திருச்சியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பெரிய கம்மாள தெரு பகுதியில் இன்று காலை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

புகார் அளித்த மாற்றுத் திறனாளியை தாக்கிய 3 போலீசார் சஸ்பென்ட் – டிஐஜி சரவண சுந்தர் அதிரடி.

விராலிமலை அருகே கவரப்பட்டி என்ற ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சங்கர்(29) இவருக்கு பிறவிலேயே இரண்டு கண்களிலும் பார்வையிழந்தவர். இவர் கவரப்பட்டி பள்ளி அருகே யாரோ அரசுக்கு தெரியாமல் மது விற்பனை செய்வதாகவும் அதனை தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டியும்…

ஹிஜாப்புக்கு தடை விதித்த கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிவதை தடை விதித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே இன்று மாலை திருச்சி மாவட்ட அனைத்து…

திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி கோயில் பங்குனி தெப்ப உற்சவம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பங்குனி மாத தெப்ப திருவிழா கடந்த மார்ச் 9-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்றிரவு நடைபெற்றது. இதனையொட்டி, இன்று மதியம் சுவாமி – அம்பாளுக்கு…

ஈவெரா கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்திய மாணவர்கள்.

ஈவெரா கல்லூரி கிளை செயலாளர் மணிகண்டன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்ட கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.  இந்திய மாணவர் சங்கம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் அமைந்துள்ள…

திருச்சியில் மார்ச் 21-ம் தேதி கல்லூரி மாணவர் களுக்கு இடையே “சிங்க பெண்ணே” என்ற தலைப்பில் கவிதை, ஓவியப் போட்டி.

மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே “சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே” என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. போட்டிகள் வரும் 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5…

மறைந்த பண்டிட் எஸ்எஸ் ஆனந்தம் 146-ம் ஆண்டு பிறந்த நாளை – தமிழக அரசு சித்த மருத்துவர் தினமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக மறைந்த பண்டிட் எஸ்எஸ் ஆனந்தம் அவர்களின் 146 ஆண்டு பிறந்த நாள் விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடபட்டது.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழியும் நிலையில் இருந்த சித்த மருத்துவத்தை மீட்டுடெடுத்த வரும்,…

திருச்சியில் நியாய விலை கடை அரிசி, கோதுமை டன் கணக்கில் பதுக்கிய குடோனுக்கு சீல்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள எழில் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி – மாணவர்கள் தொழில் முனை வோராக ஊக்கு விக்கும் சிறப்பு மையம் திறப்பு.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தாங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலை வாய்பை மாணவர்களிடையே உருவாக்கும் முயிற்சியில் பேராசிரியர்களின் துணை கொண்டு செயின்ட் ஜோசப் தொடக்க சிறப்பு மையம் திறப்பு மற்றும்…

குளித்துக் கொண்டிருந்த தாயை உலக்கையால் அடித்து கொன்ற மகன்.

புதுக்கோட்டை ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் வயது 45 இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வராஜ் வயது 28 என்பவரை தத்தெடுத்து தனது சொந்த மகனாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சில கடந்த 3…

திருச்சி தமிழ் சங்கத்தில் “நிறுவனர் நாள் விருது” வழங்கும் விழா கொண்டா டப்பட்டது.

திருச்சி தமிழ் சங்கத்தின் நிறுவனர் துரைசாமிப்பிள்ளை அவர்களின் 112வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு “நிறுவனர் நாள் விருது” வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்க மன்ற கட்டிடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ் சங்க தலைவர் முனைவர் ‌அரங்கராஜன் தலைமை…

அடுத்த பிரதமர் மு.க.ஸ்டாலின்? – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக் குமாரின் பதில்!!!

திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்று காலை 10:30 மணி அளவில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் போட்ட பொய் வழக்கு காரணமாக மேலாண்மை…

திருச்சி என்.ஐ.டியில் 3 நாள் பிரக்யான் தொழில்நுட்ப மேலாண்மை விழா – இயக்குனர் அகிலா பேட்டி

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி “பிரக்யான்” தொழில்நுட்ப மேலாண்மை விழாவை முன்னிட்டு அதன் இயக்குனர் அகிலா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் என்.ஐ.ஆர்.எஃப் 2021 தரவரிசையில் , நாட்டின்…

திருச்சி நீதிபதியை கண்டித்து – வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சட்டத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது கூடுதல் மகிளா நீதிமன்றம் செயல்படுகிறது. கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மணிவாசகன் நடுவராக உள்ளார். நடுவர்…

இன்று முதல் 12 முதல் 14 வயதுக் குட்பட்ட சிறுவர் களுக்கு கொரோனா தடுப்பூசி.

இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இணையதளத்தில் முன்பதிவு செய்தும்,…