Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

திருச்சி ரவுடிகள் 2 பேர் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் , கொலை வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும்…

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த தளபதி பிபின் ராவத் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கி பகல் பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று வந்தனர்.…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 6- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் நீள்முடி கிரீடம் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஆக்கிர மிப்புகள் அகற்றம்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி வரும் 24-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு வரும் 14-ந்தேதி நடைபெறுகிறது.…

ஊட்டியில் ஹெலிகாப்டர் விபத்து – இந்திய முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் பலி.

தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-17வி5 ரக ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள்…

முத்தரச நல்லூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபி ஷேகம் இன்று நடந்தது.

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் புறனமைகப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கியது ஆறு கால யாகசாலை நடைபெற்று.  இன்று…

அமமுகவின் இலக்கு அதிமுகவை மீட்பது மட்டுமே – டிடிவி தினகரன் பேட்டி.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பகல் பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா ஆகியோர் சாமி தரிசனம் செய்ய…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 5-ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

மழையினால் சாலையில் திடீர் வெள்ளம் – பாதுகாப்பு பணியில் போலீசார்.

திருச்சி அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மழை வெள்ளம் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மறைத்தபடி வழிந்தோடுகிறது. மழை வெள்ளத்தில் போக்குவரத்தை சீர் செய்த போக்குவரத்து உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் போலீசார் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக மழை வெள்ளத்தில்…

திருச்சி அரியாற்றில் உடைப்பு – மழை வெள்ளம் பாதிப்பு படங்கள்.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரியாற்றில் இருகரையை தொட்டு தண்ணீர் வந்தது. இந்நிலையில் மணப்பாறையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-   திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ( பரமபதவாசல் திறப்பு ) நடைபெறுவதையொட்டி , வருகிற 14.12.2021 முக்கிய ( செவ்வாய்க்கிழமை )…

திருச்சி- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 4-ம் நாளான இன்று நம்பெருமாள் சிறப்பு அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி குண்டூரில் நடந்தது.

திருச்சி அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி குண்டூரில் மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் மாநில…

இருசக்கர வாகனங்கள் திருடிய லாரி டிரைவர் கைது – வாகனங்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே கல்லக்குடி காவல் சரகத்தில் 7 இருசக்கர  மோட்டார் வாகனங்கள் திருடிய லாரி டிரைவர் கைது கல்லக்குடி போலீஸார் கைது செய்தும் அவரிடமிருந்த 7 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கல்லக்குடி கடைவீதியில் கடந்த…