ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற டாரஸ் லாரியில் 60 பசு மாடுகளை அனுமதியின்றி ஏற்றிக்கொண்டு சென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த ஈது வயது 26 என்பவர் ஓட்டி வந்தார். லாரி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது.

இது குறித்து சமயபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அனுமதி இன்றி 60 பசு மாடுகள் ஏற்றி செல்வது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் குமார் லாரியில் அனுமதி இன்றி மாடுகளை ஏற்றி வந்த டிரைவருக்கு ரூபாய் 11000 அபராதம் விதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *