திருச்சியை சேர்ந்த முதியவர் ஒருவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரில் கூறியிருப்பதாவது;-

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் வாலிபர் ஒருவர் பேசினார் அவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி எனவும் நீங்கள் உங்களுடைய செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள் என கூறி அதற்கான ஆதாரங்கள் எல்லாம் உள்ளது இதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய போவதாக சொன்னார் மேலும் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல் இருப்பதற்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என மிரட்டல் விடுத்தார். முதல் தவணையாக 5000 ரூபாய் வழங்கினேன் அதனைத் தொடர்ந்து மீண்டும் சில நாட்கள் கழித்து என்னிடம் அதே வாலிபர் 15 ஆயிரத்து 600 ரூபாய் கேட்டு மிரட்டியதால் அவருடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தினேன்.

 இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததால் இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வந்தனர் மேலும் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் எண்னை வைத்து விசாரணை செய்ததில் போலீசார் போல் நடித்து பணம் பறித்த வாலிபர் கோவை சேர்ந்த அசோக் வயது 24 என்பது தெரியவந்தது இதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *