திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், திருவெறும்பூர், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் திட்டம் பணிகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்களுடன் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்

திருச்சி மாவட்டத்தில் 54 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பில் 13 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளையும், தலைமை ஆசிரியரிடம் கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறோம். தமிழகத்திலேயே மைக்ரோபயாலஜியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவியால் நமக்கு மிகுந்த பெருமைதான். வருங்காலத்தில் கல்வித்துறையில் பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதாக இருந்தாலும், ஆசியர்களை உற்சாகப்படுத்துவது ஆக இருந்தாலும் சரி சிறந்த மாணவர்களை உற்சாகப்படுத்துவது ஆக இருந்தாலும் சரி இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன்.

இதுவரை சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இருந்தது இந்த வருடம் அந்த இலக்கை அடையும் சூழல் உள்ளது. பல திட்டங்களை நம் கொண்டு வருகிறோம். அது 7.5 சதவீதம் இருந்தாலும், காலை சிற்றுண்டி வழங்குவதாக இருந்தாலும் மாணவர்களை மேம்படுத்தும் விதமாக மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நிறையாக கொண்டு வருகிறோம். இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கின்றது திட்டங்களாகும், உயர் கல்விக்கும், வேலை வாய்க்கும் என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து அவை கொடுத்தால் அரசு பள்ளிகளை முதலில் தேடி வருவார்கள் என்பதை முதல்வர் அறிந்து கல்வித்துறையில் பல திட்டங்களை கொண்டு வருகிறார். இன்று காலை மதுரையில் எண்ணும் எழுத்தும் என்ற ஒரு திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறேன்.

இதன் மதிப்பு 2025ல் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மற்றும் மூன்றாம் வகுப்பு படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு அடிப்படையாக தமிழாக இருந்தாலும் ஆங்கிலம் இருந்தாலும் எழுதவும் படிக்கவும் அடிப்படை கணக்குகளை அவர்கள் தெரிந்து கொள்வதில் மிகப்பெரிய முன்னேற்றம் தமிழ்நாடு அடையும். இடியும் தன்மை உள்ள கட்டிடங்களில் அமர்ந்து படிக்க கூடாது என சொல்லி இருக்கிறோம் இது தமிழகம் முழுவதும் அறிவித்துள்ளோம். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த பள்ளிக்கூடங்களுக்கு நிதிகள் எல்லாம் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான இதில் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். மேலும் மற்ற துறைகளுக்கு கட்டிடம் கட்டுவதை விடவும் எங்களது கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளேன். நிதிகள் ஒதுக்கீடு செய்ய செய்ய எந்தெந்த பள்ளிகளுக்கு தேவையோ அது வேலைகளை துவங்கப்படும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர் இடமும் பேசியுள்ள பொது நிதியாக இருந்தாலும் சரி அதனை கொண்டு எங்கெங்கெல்லாம் உடனடியாக கட்டடங்கள் கட்ட வேண்டுமோ, எங்கெல்லாம் கழிவறை தேவையோ அதற்கு செவிசாய்த்து கட்டி தருவதற்கான கோரிக்கை வைத்துள்ளோம். என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியையும், அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் நிதி வரும்வரையில் என்னென்ன செய்ய வேண்டுமோ கண்டிப்பாக செய்யப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *