திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், இருங்களூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு ரூபாய் 25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடடத்தினைத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 15 யனாளிகளுக்கு ரூபாய் 37.31 இலட்சத்திற்கான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், பழனியாண்டி, ஒன்றியக்குழுத் தலைவர ஸ்ரீதர், இணைப் பதிவாளர்கள் ஜெயராமன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *