கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியில் காதல் ஜோடி ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த ஹான் பேகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ( 2.1/4 ) கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பீளமேடு காவல் ஆய்வாளர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

போலீசார் விசாரணையில் கோவை மாவட்டம் பீளமேடு காந்தி நகர் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் வயது (21) – விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (21) ஆகிய இருவரும் காதலித்து வருவதும். சூரியபிரகாஷ் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். வினோதினி டிப்ளமோ நர்சிங் படித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இருவரும் கோவை காந்தி மாநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர். திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக இருவரும் திட்டமிட்டு இருந்த நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களுக்கு வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்பு உள்ளதா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் ஜோடி ஒன்று கஞ்சா பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்