திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மருதம்பட்டி டாஸ்மாக் கடையில் காலை சுமார் 10 மணியில் இருந்து மதுபான பிரியர்கள் ஆயிரத்திற்கு மேல் கூடியுள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருதம்பட்டி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தின் மிக அருகில் உள்ளது. தற்போது நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் கொரோனா அதிகம் உள்ளதால் அங்கு டாஸ்மாக் கடை திறப்பது இல்லை. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, ஆண்டாள்புரம், புதுப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வடுகப்பட்டி, கரூர் மாவட்டம் கரூர், வாங்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் மதுபானங்கள் வாங்க இங்கு அதிகம் கூடுகின்றனர்.
ஆனால் அந்த கடைக்கு எப்பொழுதும் போலவே மதுபாட்டில்கள் கொடுப்பதால் மதுபாட்டில்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் தீர்ந்து விடுகிறது. மீண்டும் மதுபாட்டில்கள் லோடு வரும் என்பதால் மதுபான பிரியர்கள் கும்பலாக அந்த கடையின் அருகிலேயே நிற்கின்றனர். அதிக அளவில் மதுபான பிரியர்கள் கூடுவதால் இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *