திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சி இடைத்தேர்தலில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவியை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் கடல் மணி வெற்றி..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமருதூர் ஊராட்சியில் முன்னால் தலைவர் ரமேஷ் மாரடைப்பால் இறந்துவிட்டார். அவரது மறைவு காரணமாக சிறு மருதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்நிலையில் நடந்த முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கடல்மணி 424 வாக்குகளும், மாரடைப்பால் இறந்த முன்னால் தலைவர் ரமேஷின் மனைவி கண்ணியம்மாள் 423 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகள் பெற்றனர். 5 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதில் கடல் மணி 1 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் 1 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மனைவி கண்ணியம்மாள் தோற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்