திருவாரூர் அருகே உள்ள கூடூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ATM மில் நேற்று நள்ளிரவு 4 திருடர்கள் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் சிலிண்டரை கொண்டு உடைத்து திருட முயற்சித்து கொண்டிருந்தபோது. அப்பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிட்டு அவர்களை தடுக்க முயற்சி செய்தார். இதில் ஆத்திரமடைந்த திருடர்கள் தமிழரசனை கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தமிழரசன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

மேலும் அங்கிருந்து தப்பிக்க முயன்ற திருடர்களில் ஒருவனை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து. காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் திருடனை ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் கூத்தாநல்லூரலை சேர்ந்த மதன் (18) என்பது தெரியவந்தது. காவல்துறையினர் மதன் மீது வழக்குப்பதிவு செய்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு, தமிழரசனை கொலை செய்து தப்பிய மற்ற மூன்று பேரை திருவாரூர் போலீசார் தேடி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *