ஒன்றிய அரசின் மூன்று வேளை சட்டங்களை எதிர்த்து உத்திரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சர் மகன் உள்ளிட்ட கொலைகார கும்பலை கைது செய்திட கோரியும், லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை அதன் சொத்துக்களையும் ஆறு லட்சம் கோடிக்கு ஏலம் விடும் நடவடிக்கையை கைவிடக்கோரி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகில் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் நடராஜா துணைச் செயலாளர் ராமராஜ் பாரத மிகுமின் தொழிற்சங்க தலைவர்கள் லோகநாதன், சங்கர் கணேஷ் கட்டுமானம் செல்வக்குமார் போக்குவரத்து அன்பழகன் மற்றும் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் ராஜேந்திரன், கருணாநிதி, ஜெயபால் ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *