திருச்சி 28வார்டு திருவெறும்பூர் பொன்மலை பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கன்வாடி மையத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி அரியமங்கலம் உதவி ஆணையர் கமலக்கண்ணன். பொன்மலை பகுதி கழக செயலாளர் தர்மராஜ் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்