திருச்சி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்வதுடன்,

அதன் உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்,

அவ்வாறு மூன்று நாட்களில் பெற்று கொள்ளாவிட்டால் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்ற கால்நடைகள் விற்கப்படும் எனவும், கால்நடைகளை விற்று பெறப்படும் பணம் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை காற்றில் பறக்க விடும் விதமாக திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் உலா வந்தபடி உள்ளன. மேலும் கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள செடிகள் மற்றும் மரக்கிளைகளை குதிரைகள் மேய்ந்து வருகிறது.

 

உடனடியாக மாநகராட்சி கமிஷனர் இந்த கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் இனி இதுபோன்ற கால்நடைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *