தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகர திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ் காட்டூர் பகுதியிலுள்ள வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் வாக்காளர்களிடம் இந்த தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நகர்புற துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரின் ஒத்துழைப்போடும், திருச்சி பாராளமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொகுதி நிதியிலிருந்து இந்த பகுதிக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து தருவேன் என உறுதி அளித்து வாக்கு சேகரித்தார். உடன் 39-வது வார்டு தேர்தல் பணிக்குழு மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *