மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நல்லாசியுடன், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆசி பெற்ற

திருச்சி 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெ.சீனிவாசன் சங்கிலியாண்டபுரம் பகுதிக்கு உட்பட்ட பாரதியார் நகர், வசந்தம் நகர் மற்றும் மணல் வாரி துறை ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தார். அதேபோல் சலவை கடையில் பொதுமக்களின் உடைகளுக்கு அயனிங் செய்து கொடுத்து மக்கள் பணியாற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் அவைத்தலைவர் ரஹீம், இணை செயலாளர் ரஹ்மத், அம்மா பேரவை செயலாளர் ஹனிபா மற்றும் இன்ஜினியர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *