நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள ஒன்றியம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புறவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் பரமசிவம். இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள தகர செட்டில் பரமசிவம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் கூறப்பட்டது. உறவினர்கள் வந்து பார்த்த போது பரமசிவத்தின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கிட்டு மர்மமாக இறந்த கிடந்தார்.

மேலும் அவரது இடுப்பு மற்றும் கால்களில் கயிறு கட்டப்பட்டுள்ளதால் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என கூறி ஆத்திரமடைந்த உறவினர்கள் ராசிபுரம் டு ஆத்தூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை மீட்ட நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *