தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கேரம் போர்டு போட்டிகள் திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்த கேரம் போர்டு போட்டியில் 8 வயது முதல் 10, 12, 14 மற்றும் 19 வயதுக்கு இடையேயுள்ள மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து 19 பள்ளிகளில் இருந்து 240 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர் அதன்படி முதல் 4 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *