தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தனர். அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே கே நகர் முதல் ஓலையூர் வரை மகளிர்க்கான கட்டணமில்லா பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவையை உடனடியாக வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் படி இன்று காலை ஓலையூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதிய வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி முன்னிலையில் அரசு பேருந்து வழித்தடத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து புதிய வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு எம்எல்ஏ பழனியாண்டி ஓட்டி சென்றார். இந்த பேருந்தானது கேகே நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஓலையூர் பஸ் நிறுத்தம் வரை தினமும் காலை மாலை என 8-முறை இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்