தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.அன்பில் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தந்தைபெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநில இணைச்செயலாளர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் வட்டச் செயலாளாகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி , பேரூர், வட்ட , சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தந்தைபெரியாரின் பிறந்தநாளையொட்டி திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, டி.டி.சி.சேரன், மகளிர் அணி மாநில செயலாளர் ரொகையா ஆகியோர் மாலை அணிவித்தனர். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, வட்ட மற்றும் மாநகர பகுதி, வட்ட நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்