பொது வினியோகத்திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் பொன்னர், மாநில துணைத் தலைவர் பிச்சைபிள்ளை மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கலெக்டர் அலுவலகம் முன்புதிரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட அலு ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்களிடம் கண்டோன் மெண்ட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, ரேஷன் கடை பணி யாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *