திருவெறும்பூர் தாலுக்கா வாழவந்தான் கோட்டை பெரியார் நகரில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறை மற்றும் காவல்துறையை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் வாழவந்தான் கோட்டை கடைவீதி பகுதியில் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், திருவெறும்பூர் தாலுகா செயலாளர் ராஜ்குமார், இளைஞர் பெருமன்ற ஒன்றியச்செயலாளர் தமிழரசன் தாலுக்காக் குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோரை துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் தலைமையிலான காவல்துறை கைது செய்து திருநெடுங்குளத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *