கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகங்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அளித்து விட்ட பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் அவரின் வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசு பாட்டாலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது.

மேலும் அவரது 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள அவரது நினைவு தூணுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலெக்டர் பிரதீப் குமார் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *