திருச்சி மாவட்டம் கொணலை ஊராட்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விமலா ராணி வயது 59 . இவர் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது பணியை முடித்துவிட்டு கல்பாளையத்தில் உள்ள வீட்டிற்க்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரிடம் வழி கேட்பது போல் பேசிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கத்தியால் ஆசிரியையின் கையில் வெட்டி விட்டு 3 பவுன் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த விமலாராணி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வழிப்பறி தொடர்பாக சிறுகனூர் காவல்நிலத்தில் அவருடைய கணவர் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி ஆசிரியையின் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்