தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக வளாகத்தில் ரூபாய் 2.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து துணை ஆட்சியர் பணியிடத்திற்கு தேர்வான 18 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் குத்து விளக்கேற்றினார். அருகில் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *