திருச்சி 29-வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கடந்த 6 மாத காலமாக தற்காலிகமாக தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்டு இயங்கி வரும் அங்கன் வாடியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அப்படி பட்ட இந்த அங்கன்வாடி மையம் மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக் காலங்களில் மழை பெய்தால் மழை நீர் மையத்தின் உள்ளே வழிந்து ஓடுகிறது,

குழந்தைகள் தினத்தின் பரிசாக மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆவணம் செய்து புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி ஆழ்வார் தோப்பு கிளையின் சார்பாக கிளை ஒருங்கிணைப்பாளர் Dr.பக்ருதீன் தலைமையில் இன்று 29 வது வார்டு கவுன்சிலர் கமால் முஸ்தபாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளை துணைத் தலைவர் காதர், மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான், தொண்டரணி மாவட்ட செயலாளர் ஆரிஃப், ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்