திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு மியூசிக் பால் என்றும் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலாம் பரிசு மாணவி தாரணி ஸ்ரீ-க்கும் இரண்டாம் பரிசு மாணவர் ரோகித் யாதவ்-க்கும் மூன்றாம் பரிசு மாணவர் அமிர்த சாய் ஆகியோர் பெற்றனர் அவர்களுக்கு பள்ளி மூத்த ஆசிரியர் சித்ரா தேவி பரிசு வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குலின் சிறப்பாக செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *