தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள நம்பிவயல் கிராமம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்திரன் வயது (35). இவா் திருவோணம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, 11 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைனையடுத்து சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக திருச்சி கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்