திருச்சி மாநகர உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் 11 வது வார்டு வேட்பாளராக முன்னாள் கவுன்சிலர் வனிதா போட்டியிடுகிறார். இவர் பி.ஏ.பிஎல், வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார், மேலும் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட கழக துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.இவர் ஏற்கனவே இரண்டு முறை மாமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது சென்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றுத் தருவேன் என்றும் பகுதி மக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *