திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன இங்கே துப்புரவு பணி களுக்கு நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் உள்ளனர் அவர்களை துப்புரவு மேற்பார்வையாளர் நிர்வகித்து பணிகளை மேற்கொள்வார் இதில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பகுதி துப்புரவு மேற்பார்வையாளர் வேலுச்சாமி என்பவரை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்தும் அவரை உடனடியாக பணியில் அமர்த்த கோரியும் திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு பாலக்கரை மண்டல தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர் இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர் பின்னர் போராட்டக்காரர்கள் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்