திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரமூர் என்ற இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் போலீஸ் கார் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

முசிறி அருகே பெரமூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சுபாஷிணி(38),கடந்த 15 வருடங்களுக்கு மேல் காவல்துறையில் பணியாற்றி வந்த சுபாஷினி தற்போது முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் இரவு பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

அப்போது திருச்சி – நாமக்கல் சாலையில் பெரமூர் என்ற இடத்தின் அருகே சென்று போது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சேலத்தை சேர்ந்த ரமேஷ்(40) என்பவர் ஸ்ரீரங்கம் ,சமயபுரம் ஆகிய கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பி வந்த கார்-சுபாஷினி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபாஷிணி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷினியின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

 

விபத்தில் இறந்து போன சுபாஷினிக்கு சுதர்சன்(11) என்ற மகனும்,நிரஞ்சனா(5)மகளும் உள்ளனர். விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து காரில் பயணித்து வந்த நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *