திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குமாரின் நண்பரான அருள்ஜோதி வயது (39) இவரும் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அருள்ஜோதி அடிக்கடி குமார் வீட்டிற்கு சென்று வரும்போது அவரது மனைவி மீது ஆசைப்பட்டு உள்ளார். அதன் விளைவாக குமார் வீட்டில் இல்லாதபோது அவரது மனைவியை அருள்ஜோதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் அதனை அருள்ஜோதி தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு வெளியில் சொன்னால் இந்த பலாத்கார வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விடுவேன் என்றும் மேலும் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது சம்பந்தமாக குமாரின் மனைவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அருள்ஜோதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்