இந்திய பிரதமர் மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ், 80 அடி ரோடு கார்னர் பகுதியில் பிஜேபி சார்பில் கட்சி கொடி ஏற்றுவதற்காக 20 அடி உயரத்தில் நேற்று மாலை கான்கிரீட் மூலம் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்டது. இன்று காலை மாவட்ட துணை தலைவர் அழகேசன் தலைமையில் மண்டலத் தலைவர் தர்மராஜ் மற்றும் பிஜேபியினர் கட்சி கொடி ஏற்றுவதற்காக வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பிஜேபியின் கட்சி கொடி கம்பத்தை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சம்பவ இடம் வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பிஜேபி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பிஜேபி கம்பம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பிஜேபியினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் கட்சி கொடி கம்பம் நடப்பட்டு பிஜேபியினர் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *