பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொன்மலை கோல்டன் தடகள சங்க மாணவ, மாணவியர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இளம் வாக்காளர்களான மாணவ மாணவிகளிடம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் எதிர்கால வாக்காளர்களான மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிப்பதை விளக்கும் வகையில் 100% VOTE வடிவில் மாணவ, மாணவியர்களை நிறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், பொன்மலை கோல்டன் தடகள சங்க கனகராஜ், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதிஸ்குமார் கோல்டன் தடகள பயிற்சியாளர்கள் , மாணவ, மாணவிகள் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *