திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதிகளில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை கொள்ளையடித்த வாலிபர் ரெத்தினம் @ ரெத்தினவேல் வயது 20. என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக , எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி வாலிபர் நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர் செய்ததின் பேரில் , ஒரு காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் , குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை வாலிபர் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு , நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும் , மேற்படி வாலிபர் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 317 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ,

ரெத்தினம் @ ரெத்தினவேல் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற கத்தியை காண்பித்து பணம் , நகை கொள்யைடுக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான என திருச்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்