இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி திமுக மாநகர் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மண்டல குழு தலைவர் துர்கா தேவி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம் நாகராஜ் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *