Month: December 2022

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் முன்னேற்ற கழகம் மற்றும் திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கம் சார்பில் 27 வது மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் திருச்சி இ.பி சாலையில் உள்ள ஜில்லா நாயுடு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

தெரு நாய்களுக்கு கருத்தடை, ரேபிஸ் தடுப்பூசி மையம் – மேயர் திறந்து வைத்தார்..

திருச்சி மாநகராட்சியில் தெரு நாய்கள் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நாய் கடிக்கு உள்ளாவதும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை பிடித்து…

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய தார் சாலை – அர்ப்பணித்த அமைச்சர் மகேஸ்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட உள் அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக ரூ.18 லட்சம் மதிப்பீட்டில்…

வாலிபருக்கு 317 நாட்கள் சிறை தண்டனை – திருச்சி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு.

திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதிகளில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை கொள்ளையடித்த வாலிபர் ரெத்தினம் @ ரெத்தினவேல் வயது 20. என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக , எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட…

போக்குவரத்து நெரிசலை குறைக்க பழைய காவேரி பாலத்தை ஆய்வு செய்த மேயர்.

காவிரி பாலம் பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள கடந்த மாதம் , காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புது காவிரி பாலம், சஞ்சீவி நகர் பகுதிகளில்…

உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் பெண்கள் ஏற்றிய 108 திருவிளக்கு பூஜை.

திருச்சி அருகே நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு…

முசிறியில் கஞ்சா கடத்திய 3-பேர் கைது – இரண்டு கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல் ஆய்வாளர் பொறுப்பு ஜெயசித்ரா, உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமை காவலர்கள் லோகநாதன் பிரசன்னா முதல் நிலைக் காவலர் முருகானந்தம்…

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லைநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சிந்தாமணி கூட்டுறவு சங்க…

*மாண்டஸ் புயல்* – திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு.

*மாண்டஸ் புயல்* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள  *பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு* நாளை (09.12.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு.

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா – திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். கடந்த…

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் தேர்வு – நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14ஆம் பேராயர் தேர்தல் திருச்சி தூய திருத்துவ பேராலயத்தில் கடந்த 5,6,7, ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி…

திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் திருட்டு 2-பேர் கைது.

திருவரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் ராஜ்குமார் வயது 19 இவர் திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் ராஜகுமாரை வழிமறித்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த…

பொது மக்களின் நலன் வேண்டி பாதாள அறைக்குள் சமாதி தியானம் மேற்கொண்ட தேஜஸ் சுவாமிகள்.

திருச்சி அருகே நங்கவரம் ஒத்தக்கடை தென்கடைக்குறிச்சி பகுதியில் உள்ளது ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமிகளின் ஸ்ரீ தட்ஷீண காளி சித்தர் பீடம் இதில் தேஜஸ் சுவாமிகள் உலக அமைதிக்காவும், வரும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையவும் சமாதி நிலை…

திருச்சியில் புதிய உழவர் சந்தையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம், மன்னச்சநல்லூரில் புதிய உழவர் சந்தையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் துணை இயக்குனர் சரவணன் வரவேற்புரை ஆற்றிட திருச்சி…

நங்கவரம் தென்கடை குறிச்சியில் நாளை தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம் – பக்த கோடிகளுக்கு சுவாமி அழைப்பு.

வரக்கூடிய 2023 புத்தாண்டில் கரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளன. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், இயற்கை சீற்றங்களால் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காகவும்,  *ஜி -20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா அனைத்து துறைகளிலும் உலகளவில் முன்னேற்றம் காண வேண்டியும்*,…

தற்போதைய செய்திகள்