75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் மினி மாரத்தான் மற்றும் மரம் நடு விழா இன்று காலை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, திருச்சி இரயில்வே கோட்ட உதவி மேலாளர் இராமலிங்கம் கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியில் சேர்ந்து நம் நாட்டு சுதந்திரத்திற்கு போராடிய வீரர்கள் நாராயணசாமி, வேலு ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து பயிற்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து. இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்ற மினி மாரத்தானை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட துணை ரயில்வே மேலாளர் ராமலிங்கம் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணன் IRPFS மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆணையர் ராஜையா மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு 5 அணி பாதுகாப்பு படை ஆணையர் ஜெயஜோதிசர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மினி மாரத்தானில் தேசிய கொடியை ஏந்தியப்படி இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் திருச்சி இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் வளாகத்தில் இருந்து துவங்கி ரோஸ் கோர்ஸ் சாலை, டிவிஎஸ் டோல்கேட், காஜா மலை சாலை வழியாக மீண்டும் இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியை அடைந்தது. இதில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 6 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் நடைபெற்றது இதில் 70க்கும் மேற்பட்ட பயிற்சிப் பள்ளியில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் தலைமை காவலர்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *