Category: திருச்சி

காவல் துறையின் ஆட்சேபனை சான்றுக்கு பாஸ்போர்ட் சேவை மையங்களில் இன்று முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப் பிக்கும் புதிய வசதி அமல்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து…

RSS, பஜ்ரங் தள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன – துரை வைகோ திருச்சியில் ஆவேச கேள்வி.

திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா தியேட்டரில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நடித்த மாமனிதன் வைகோ திரைப்படத்தை வெளியிட்டு திரைப்படத்தை கண்டு ரசித்தார். முன்னதாக மாநில மகளிர் அணி நிர்வாகி டாக்டர் ரொக்கையா தலைமையில் உற்சாக வரவேற்பு…

திருச்சி வந்த தென்னக இரயில்வே பொது மேலாளர் மால்யாவுக்கு SRMU சார்பில் உற்சாக வரவேற்பு.

SRMU பேரியக்கத்தின் பொதுச் செயலாளரும், AIRF-ன் தலைவருமான டாக்டர். கண்ணையா அவர்களின் ஆணைப்படி பேரியக்கத்தின் தலைவர் ராஜா ஸ்ரீதர் வழிகாட்டலில் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் மால்யாவுக்கு SRMU/AIRF சார்பாக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.…

திருச்சி அதிமுக நிர்வாகிக்கு சிறை தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திருச்சி, மணப்பாறையை அடுத்த போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (60) இவர் மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் மணப்பாறையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், மாற்றுத் திறனாளியுமான நிர்மலாதேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ள…

ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் சார்பில் சிறந்த ஆசிரியர் களுக்கு துரோணாச் சாரியா விருது வழங்கப்பட்டது

ஆசிரியர் தின கொண்டாட்டமாக ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் சார்பில் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கி சமூக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கும் விழா திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் தலைமை…

சமயபுரம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்பு உறவினர் களிடம் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்ற வழக்கில் கைதான அரியலூர் மாவட்டம், ஓரியூரை சேர்ந்த முருகானந்தம் காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த திருச்சி மண்டல டிஐஜி சரவணசுந்தர் மற்றும்…

மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் – சிஐடியு ஆட்டோ ரிச்சா ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோவிற்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் துவக்கி தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க டீசல், பெட்ரோல், கேஸ் மானிய விலையில் வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஆட்டோ…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தூய்மை பணியாளர் திடீர் மாயம் – போலீஸ் விசாரணை.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் ஒன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது…

திருச்சியில் மாயமான முதியவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டர் கணேசன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 64). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு…

தெற்கு ரயில்வேயில் பாரத் கௌரவ் (தனியார் சுற்றுலாப் பயணம்) திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – பொது மேலாளர் மல்லையா பேட்டி.

திருச்சி பொன்மலை பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது PSU LOGO மற்றும் NMGHS ரயில் இன்ஜின்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் பொன்மலை பணிமனையினை ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இது ஒரு…

திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்கினை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 17இலட்சத்து 10ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்ட…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி இணைந்து மவுத் ஆர்கன் வாசித்ததை கண்டு ரசித்த பக்தர்கள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 26-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார்…

சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலரை பணியிடை நீக்கம் செய்து SP சுஜித் குமார் உத்தரவு.

மாகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர் . பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு , வழிப்பறி , செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக தெரிகிறது…

வீட்டுமனை பட்டா ரத்து செய்யப் பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை – நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி.

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 78.5 சென்ட் நிலம் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 65 குடும்பங்களுக்கு கடந்த 1996 ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனைகளை பெற்ற பயனாளிகள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். பின்னர் முறையான சாலை…

திருச்சி மக்களை அச்சுறுத்தும் நாய்கள் – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் நாய்களை பிடித்துச் செல்வதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள்…

தற்போதைய செய்திகள்