மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சி – பாஜக தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் நலத்திட்டங்களின் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இந்த கண்காட்சியை மாவட்ட தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் பிரின்ஸ்…
பா.ஜ.க எம்.பி பிரஜ் பூசனை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்.
இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் பிரிட்ஜ் பூசன் சரண் சிங். இவர் பாஜக எம்பியுமாக உள்ளார். பிரஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை…
குற்ற வழக்குகளை கண்டறிய காவல் துறையில் சேர்ந்த “காவேரி”.
தமிழக காவல்துறையில் “கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Dabur Man என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு காவேரி…
திருச்சியில் தனியார் பஸ் மோதி – ஒருவர் பலி,10-பேர் காயம்.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பஸ் கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.தொடர்ந்து சாலை…
உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா – பக்தர்கள் தரிசனம்.
108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகும். திருமங்கையாழ்வரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோவில் என பிரசித்தி பெற்றதும் மும்மூர்த்திகளும்,முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.இந்நிலையில் உத்தமர் கோயிலில்…
1-கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் ஏர்போர்ட் பயணிகளிடம் விசாரணை.
திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூம் மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 2 ஆண் 1 பெண் பயணி உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்த…
ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர் களுக்கு அம்மை நோய் – எஸ்ஆர்எம்யூ கோரிக்கை.
திருச்சி கோட்டத்தில் மண்டல பல்துறை பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் அனைத்து மாநிலத்தை உள்ளடக்கிய மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். தென்னக ரயில்வே முழுவதும் இப்பயிற்சி பள்ளியில் திருச்சியில் மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் PRO ASM,…
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் – ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணை இயக்குனர் லட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
தடை செய்யப்பட்ட 56-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி.
திருச்சி பெரியகடை வீதி, ராணி தெரு பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து வந்த ரகசிய தகவலை அடுத்து திருச்சி மாவட்ட உணவு…
2022-2023-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள்,…
7-வயது சிறுமிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை அதிநவீன சிகிச்சை மூலம் சரி செய்த திருச்சி காவிரி ஹார்ட்சிட்டி மருத்துவக் குழுவினர்.
திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் 7 வயது சிறுமிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை செரா பிளாக்ஸ் செப்டல் அக்லூடர் என் நவீன சிகிச்சை முறையில் சரி செய்து புதிய சாதனை படைத்துள்ளது இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த…
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கள்ளச் சாராயம் மற்றும் போதை பொருட் களுக்கு எதிரான கையெழுத்து போராட்டம்.
தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்டம் சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசை…
ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு…
ஏர்போர்ட்டில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 ஆண் பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை – மேயர் அன்பழகன் எச்சரிக்கை.
திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள லூர்துசாமி கூட்டரங்கில் திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் போக்குவரத்துக்கு…















