முதல்வரை பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சிப்பது தமிழ்நாட்டின் துரதிஷ்டம் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு பேட்டி.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நிலவியது போன்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. அவர்களை வெளியேற்றியது போல் தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் மக்கள் விரோத பா.ஜ.க அரசை வெளியேற்ற வேண்டும் எனவே 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்தின் ஒரு…

திருச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமை தமிழக நகராட்சி நிர்வாக துறை…

திருச்சியில் நடந்த தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள்.

தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள் திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான போட்டிகளுக்கு பொன்மலை பணிமனை மேலாளர் ஷாமதார் ராம் தலைமை தாங்கினார்.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம்…

திருச்சியில் பொது மக்களுக்கு சேவை ஆற்றிய வக்கீல்கள் – “சேவை ரத்னா” விருது வழங்கிய நீதிபதிகள்.

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் திருச்சி மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொதுமக்களுக்கு சேவை செய்து வழக்கறிஞர்களுக்கு “சேவை ரத்னா” விருது வழங்கும் விழா மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் அகில இந்திய வழக்கறிஞர்…

திருச்சி முன்மாதிரி மாவட்டமாக கொண்டு வருவோம் – அமைச்சர் கே.என் நேரு.

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாயொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்…

பஸ் படிக்கட்டில் தொங்கினால் வழக்கு – காவல்துறை எச்சரிக்கை

கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் மாணவர்கள் தங்களின் கெத்தை காட்டுவதற்காக பஸ்சின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் தொங்கிய படியும், பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி, பாட்டு பாடி, குத்தாட்டம் போட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகரின் பஸ்களில்…

திருச்சியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்ணை வீட்டினுள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி ராஜா வயது…

அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கலெக்டரிடம் விவசாயிகள் புகார்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்ற பிறகு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு – சாமானிய மக்கள் நல கட்சியினர் மனு.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் புதிதாக மணல் குவாரி  அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் – திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் மனு அளித்தனர். காவிரி,கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் 16 இடங்களில் லாரிகளுக்கான மணல்…

உலக காசநோய் விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் , உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வுக் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டார் , அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப்…

திருச்சி மில்ட்ரி கேண்டினில் நடைபெறும் முறை கேடுகளை கண்டித்து – முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி கண்டோன்மென்ட் அருகே கோல்டன் பால்ம் மில்ட்டரி கேன்டீன் செயல்பட்டு வருகிறது – திருச்சி,தேனி,திண்டுக்கல் நாமக்கல்,தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவப் படை வீரர்கள் இந்த கேண்டினில் இராணுவ துறையின் கீழ் வழங்கும் பொருட்களை பெற்று பலனடைந்து வருகின்றனர்.…

திருச்சியில் விவசாயி களுக்கான மண்டல அளவிலான 2-நாள் வர்த்தக தொடர்பு பணிமனை கூட்டம் – கலெக்டர் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் , திருவாரூர் , நாகபட்டினம் , மயிலாடுதுறை , பெரம்பலுார் , அரியலுார் மற்றும் புதுக்கோட்டை பங்கு பெற்ற…

வங்கியில் மனைவியை வெட்டித் தள்ளிய கணவன்.

தேனி மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி வெள்ளைச்சாமி வயது 38 இவரது மனைவி பிரேமலதா வயது 32, இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து…

திரு நங்கைகள் இளங்கலை பட்டப் படிப்பு படிக்க இலவச சீட்.

கல்லூரிகளில் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கக் கூடிய 131 கல்லூரிகளிலும்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 58 லட்சம் பணம், 125 கிராம் தங்கம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் மாரியப்பன் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் வழங்கிய…