Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

திருச்சியில் (02-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 66 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 545 பேர்…

சாம்பியன்ஷிப் பெற்ற சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போட்டிகள் ஹரியானாவில் உள்ள சிர்ஷா கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடந்தது. இதில் கிரிக்கெட் கபடி சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது…

திருச்சி கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருட்டு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருள்மிகு ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது இந்த கோவிலின் பூசாரியாக இருப்பவர் அய்யனார் வழக்கம்போல் இன்று காலை கோயிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார் அப்போது கோயிலின் உள்ளே உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை…

பொதுத்துறை நிறுவனங்களை 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடும் ஒன்றிய அரசை கண்டித்து – மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நீர்மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடுவதை கைவிட வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். ரயில்வே,…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின்றி நடந்த உறியடி உற்சவம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு…

பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – அதிகாரிகள் திடீர் ஆய்வு.

பள்ளிகள் திறப்பதை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி…

கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை – டி.டி.வி தினகரன் பேட்டி

திருச்சி அ.ம.மு.கவின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- நதியினில் வெள்ளம் கரையினில் சிரிப்பு என்கிற பாடலில்…

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை – உடலை வாங்க மறுத்து விவசாயிகள் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம் பேரூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி மருதமுத்து. இவர் விவசாயத்தை மேம்படுத்த அருகில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6000/- தவணை செலுத்த வேண்டும்.இந்நிலையில், கொரோனாவால் அறிவிக்கப்பட்ட…

திருச்சியில் பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்

தமிழகத்தில் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.  9 முதல்…

சுகாதாரத்துறையில் தகுந்த பணிகள் வழங்கி, நிரந்தரபடுத்திட கோரி தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தேசிய கிராமப்புறசுகாதார திட்டத்தின் கீழ் ஆஷா(ASHA) பணியாளர்கள் விடுப்பின்றி ,ஓய்வின்றி 24 மணி நேரம் கிராம மக்களிடையே பணிபுரிந்து ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து சுகாதார திட்டங்களை அமுல்படுத்துவதில் பணியாற்றி வருகின்றனர். கொரனோ பெருந்தொற்று காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி…

திருச்சி மத்திய சிறை – சிறப்பு முகாமில் இருந்து வெளி நாட்டு கைதி தப்பி ஓட்டம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் மற்ற நாட்டைச் சேர்ந்த கைதிகளை தங்க வைப்பதற்காக அவர்களுக் கென்று தனியாக அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் நைஜீரியா, இலங்கை, ரூவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 110-க்கும் மேற்பட்ட அயல்…

திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்காக தயார்நிலையில் வகுப்பறைகள்.

கொரோனா காரணமாக பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த தமிழக பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதலாவதாக 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படம் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சையது முர்துஷ மேல்நிலைப்…

அரசு அலுவலர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-11 நேரடி நியமன அலுவலர் சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .  மாநில தலைவர் செய்யது அபுதாகிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்…

திருச்சியில் (30-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 554 பேர்…

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு உள்ள வயது வரம்பை நீக்க கோரி திருச்சி கேர் கெமிஸ்ட்ரி அகாடமி இயக்குனர் முத்தமிழ்செல்வன் தலைமையில் முதுகலை ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி கேர் கெமிஸ்ட்ரி அகாடமி இயக்குனரும் கல்வியாளருமான முத்தமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயர்நிலை கல்விக்கு…