பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், ஆகியோரும் கழக தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *