நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் கிரமத்தில் கடந்த 3 மாதமாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய தோட்டத்தில் வளர்க்கும் 200க்கும் மேற்பட்ட கோழிகள் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் திருடி வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மிண்னக்கல் கிராமத்தில் சேர்ந்த விவசாயி மாணிக்கம்(47) என்பவரது வீட்டின் அருகில் கோழி கூண்டில் இருந்த கோழிகள் இரவில் சத்தம் போட்டதை அடுத்து விவசாயி டார்ச்சு லைட் அடித்து பார்த்த போது 2 நபர்கள் கோழிகளை பிடித்து இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையில் போட்டது அறிந்து கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் சந்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்களை சுற்றி வளைத்து கையும்,களவுமாக பிடித்து வெண்ணந்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், சேலம் மாவட்டம் பாலம்பட்டியை சேர்ந்த கார்த்தி(27) தேவராஜ்(42) என்பதும் இவர்கள் திருடிய கோழிகளை மின்னக்கல் பகுதியில் கோழிகடை ராஜீயிடம் விற்பனை செய்தது தெரிந்தது. இது குறித்து ராஜீயிடன் விசாரித்த போது, திருட்டு கோழிகளை வாங்கியதை ஒப்புகொண்டுள்ளார்.

இதனை அடுத்து, கோழிதிருட்டில் ஈடுபட்ட கார்த்தி,தேவராஜ், மற்றும் திருட்டு கோழியை வாங்கிய ராஜி ஆகிய 3 பேரையும் அவர்கள் திருடிய கோழி, மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வகனத்துடன் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து திருடிய கோழிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *