சேலம் மாவட்டம் இரும்பாலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில்

சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக சேலம் ஐந்து ரோட்டில் உள்ள நோபல் கிரியேஷன்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் இயக்குனர் எடப்பாடி சேர்ந்த வேல்சத்ரியன் மற்றும் அவருடைய பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகிய இருவரையும் சேலம் மாநகர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இருவரையும் தனித்தனியே போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியப்பின் மீண்டும் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்த நிலையில் வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய இருவரையும் இன்று சேலம் மாநகர போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *