தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் தொழில் நகரங்களான சென்னை, கோவை, ஓசூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பணி நிமித்தமாகவும் கல்வி நிமித்தமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் 23ஆம் தேதி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு முந்தைய நாளான இன்று 23ஆம் தேதி அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வெள்ளி, சனிக்கிழமைகளில் பயணம் செய்ய விரும்புவோர் நேற்றும், நேற்று முன்தினமும் இணைவழியில் டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *