அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர்.மனோகரன் இன்று காலை மணிகண்டம் தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கருமாரி அம்மன் நகர், செங்குறிச்சி மேற்குடி முடிகண்டம் கோலார்பட்டி நடுப்பட்டி ஆலம்பட்டி கவுத்த நாயக்கன்பட்டி செட்டியூர் பட்டி யாகப் உடையான் பட்டி பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மனோகரன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துக்கருப்பன் பிஜேபி பட்டியல் அணி மாவட்ட தலைவர் மணிவேல் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் பெரியசாமி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சண்முகம் பிஜேபி ஒன்றிய வட்டார தலைவர் சிவமணி தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அந்தோணிசாமி மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் அற்புதராஜ் மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…
